வெளிப்புற வெப்பநிலை அதிகமாக உயரும்போது, முதியவர்களின் உடலால் விரைவாகச் சரிசெய்ய முடிவதில்லை. வயதாக ஆக, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் வெப்பநிலையைச் சீராக்கும் திறனும் பலவீனமடைகின்றன. இதனால்தான், கடும் வெப்பத்தில், முதியவர்கள் விரைவாகச் சோர்வடைவதுடன், தலைச்சுற்றல், பீதி ஆகியவற்றை அனுபவித்து, சில சமயங்களில் மயக்கமும் அடைகிறார்கள்.

