மும்பை: பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றியை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வெற்றி விழா அணிவகுப்பில் தனக்கு நம்பிக்கை இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
புதன்கிழமை அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் லட்ச கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது ஒரே நேரத்தில் மைதானத்தின் நுழைவு வாயில்களில் அதிகளவிலான மக்கள் உள்ளே நுழைய முயன்ற காரணத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர்.