மதுரை: வேங்கைவயல் செல்ல அனுமதி வழங்கக் கோரி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் ஏதேனும் வக்காலத்து பெற்றுள்ளாரா? என ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். வேங்கைவயலில் யாரைப் பார்க்கச் செல்கிறீர்கள்; அவர்களுக்கு உதவி செய்ய சட்ட உதவி மையம் உள்ளது என நீதிபதி கூறினார். மேலும், வேங்கைவயல் செல்ல அனுமதி வழங்க மறுத்த நீதிமன்றம் மனு குறித்து மாவட்ட காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மலர்மன்னன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
The post வேங்கைவயல் செல்ல அனுமதி கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.