நாகப்பட்டினம்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித அன்னை ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று அதிகாலை சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.