
பரிதாபாத்: தலைநகர் டெல்லியின் எல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லப்காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒருவர் தனது இரண்டு தோழிகளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் இளைஞர் ஒருவர் கையில் பையுடன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தார். அவரின் அருகே அந்த மாணவி வந்ததும் பின்தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாணவியை நோக்கி சுட்டார்.

