ஜார்ஜியா: அமெரிக்காவின் தென்கிழக்கு ஜார்ஜியா மாகாணத்தில் கட்டப்பட்டு வரும் ஹூண்டாய் தொழிற்சாலையில், தென்கொரியாவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக பணியாற்றுவது தெரியவந்தது.
இவர்கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள பேட்டரி தயாரிப்பு மையத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் மற்றும் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.