சென்னை: இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது இரு மொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை இடையே தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் திமுக, தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே உறுதியாக பின்பற்றப்படும் என கூறி வருகிறது. திமுகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.