இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் கைாகோக்கிறது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஸ்டார்லிங்கின் அதிவேக இண்டர்நெட் சேவையை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளது. எலான் மஸ்க் நிறுவனத்துடன் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் ஒப்பந்தம் இதுவாகும். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பது அதன் சொந்த அதிகாரத்தை பெறுவதற்கு உட்பட்டது.