சென்னை: “ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும்” என்று திமுக தொண்டர்களுக்கு முரசொலி பத்திரிகையில் எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் அவர் தொண்டர்களுக்கு எழுதும் 7வது கடிதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.