திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனூத்து கிராமத்தில் காவல்துறை சிறப்பு எஸ்ஐ வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், நடந்த அசம்பாவிதத்திற்கு காவல்துறையின் எதிர்வினையாக அமைந்துள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறை அதிகாரிகளே கொல்லப்படுகிறார்களே என்று மக்கள் திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. என்ன செய்கிறது காவல்துறை? காவல்துறைக்கே இந்த நிலைமையா? போன்ற கேள்விகளை பொதுமக்கள் கோபத்துடன் எழுப்பும் சூழ்நிலைகளில் என்கவுன்ட்டர் சம்பவங்கள் மூலம் முக்கிய குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்படுவது, மக்களின் கோபம் அப்போதைக்கு தணிந்து ஆறுதல் தருகிறது.