
புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் புதுச்சேரி முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.

