குஜராத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். கட்டிடத்தில் சிக்கிய சுமார் 40 குடியிருப்பாளர்கள் மீட்கப்பட்டனர்.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கும் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காவல் நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, அட்லாண்டிஸ் ஆறாவது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் இருவர் கல்பேஷ் லியூவா மற்றும் மயூர் லியூவா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். மூன்றாவது நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இறந்தவர்களில் இருவர் வெளியாட்கள் என்றும், அவர்கள் ஏதோ வேலைக்காக கட்டிடத்திற்கு வந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிலர் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கு வேறு கரணங்கள் கூட இருக்கலாம் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நிலைமை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
The post குஜராத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.