புதுடெல்லி: ஹம்தர்த் நிறுவனத்தின் பிரபல பானமான ‘ரூஹ் அஃப்சா’-வை தாக்கி பாபா ராம்தேவின் பதஞ்சலி வெளியிட்ட சர்பத் ஜிகாத் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபா ராம்தேவ், அவரது பதஞ்சலி நிறுவனத்தின் சர்பத் ஒன்றை அறிமுகப்படுத்தி வெளியிட்ட வீடியோ ஒன்றில் பிரபல சர்பத் பிராண்டான ரூஹ் அஃப்சாவை மத ரீதியாக தாக்கியிருந்தார். அந்த வீடியோவில் பதஞ்சலியின் ரோஸ் சர்பத்தை அறிமுகப்படுத்தி பேசிய ராம்தேவ், “சில நிறுவனங்கள் சர்பத் தயாரிக்கின்றன. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் மசூதிகளை உருவாக்கும். நமது செயல்பாடுகள் குருகுலங்களை உருவாக்கப்போகிறது.” என்று தெரிவித்திருந்தார்.