சென்னை: "செங்கோட்டையன் அமைதியானவர், நாகரிகம், அநாகரிகம் பற்றி அவருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரனிடம் செங்கோட்டையன் அநாகரீகமாக நடந்து கொள்வதாக வைகைச்செல்வன் கூறியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நாகரிகம், அநாகரிகம் பற்றி எல்லாம் செங்கோட்டையனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. அவர் அமைதியானவர், எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காதவர். அவர் எதிரணியில் இருந்தாலும் உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தொடர்ந்தார்.