திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே குண்டராவில் உள்ள தண்டவாளத்தில் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஒரு டெலிபோன் கம்பம் விழுந்து கிடந்தது. போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று அந்த டெலிபோன் கம்பத்தை அகற்றினர். சிறிது நேரத்தில் மீண்டும் அதே டெலிபோன் கம்பம் தண்டவாளத்தில் கிடந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அதை அங்கிருந்து அகற்றினர்.
இது ரயிலை கவிழ்க்க நடந்த முயற்சியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் டெலிபோன் கம்பத்தை தண்டவாளத்தில் போட்டது அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அருண் என்று தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
The post தண்டவாளத்தில் டெலிபோன் கம்பம் கொல்லம் அருகே ரயிலை கவிழ்க்க சதி? 2 பேர் கைது appeared first on Dinakaran.