தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
‘குரோதி’ ஆண்டு நிறைவடைந்து, ‘விசுவாவசு’ தமிழ் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி, புத்தாடைகள் அணிந்து உறவினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களை இறைவனுக்கு படைத்து, உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.