
புதுடெல்லி: தேசிய மதிப்பீடு மற்றம் அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதாக தவறான தகவலை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மதீப்பீடு செய்து சான்றிக்கும் பணியை தன்னாட்சி அரசு அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பு, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், "அல் பலா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் சில, என்ஏஏசியால் அங்கீகாரம் பெறவில்லை அல்லது அதற்காக விண்ணப்பிக்கவில்லை.

