
சென்னை: தீபாவளி பண்டிகையன்று காற்று மற்றும் ஒலி மாசு குறைந்த பகுதியாக பெசன்ட் நகரும், அதிகரித்த பகுதிகளாக வளசரவாக்கம், திருவொற்றியூரும் கண்டறியப்பட்டதாக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசின் அறிவுறுத்தல்படி தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணிமுதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரையிலும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தப்பட்டது.

