கேரளா: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து கிடுகிடுவென உயர்வதால், தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பு விநாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் 15 அடிக்கு மேல் அணையின் நீர் மட்டமானது உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6125 கன அடியாக உள்ள நிலையில் தற்போதைய நீர் மட்டம் 129.85 அடியாக உள்ளது.
The post பருவமழை தீவிரம்: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து உயர்வதால், நீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.