புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படையின் விமானப் பிரிவில் முதல் முறையாக பெண் பொறியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்), உள்துறை அமைச்சகத்தின் கீழ் செல்படும் விமானப் பிரிவு கடந்த 1969-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் எம்ஐ 17, சீட்டா, துருவ் ரக ஹெலிகாப்டர்கள், மற்றும் விஐபிக்.கள் பயணத்துக்கு பயன்படுத்தப்படும் எம்பரர் ஜெட் விமானமும் உள்ளது.