புதுச்சேரி: அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நடப்பாண்டில் மாற்றப்பட்ட நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் 102 தனியார் பள்ளிகளில் படிக்கும் மற்றும் தனி தேர்வர்கள் 8,105 ஆயிரம் பேருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
புதுச்சேரியில் தனிகல்வி வாரியம் இல்லை. தமிழக அரசு பாடத்திட்டத்தையே அவர்களும் பின்பற்றி வந்தனர். இந்தநிலையில் அங்கு அரசுப்பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் முதல் வகுப்பிலிருந்து 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலானது. நடப்பு கல்வியாண்டில் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலானது. அதைத்தொடர்ந்து இம்முறை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.