ரஷ்யாவிடம் வர்த்தக உறவு வைத்துள்ள இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என்று வெளிவரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் போரில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யா இரண்டு வாரங்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி மற்றும் அபராத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.