மயிலாடுதுறை: சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் பயின்று வரும் மூன்றரை வயது சிறுமி ஒருவர், கடந்த 24-ம் தேதி உணவு இடைவேளையின்போது கை கழுவுவதற்காக வெளியே சென்ற நிலையில், அவரைக் காணவில்லை.