முதுமலை பந்திப்பூர் சாலையில் புகைப்படம் எடுக்க வந்தவரை காட்டு யானை விரட்டி தாக்கியதில், அந்நபர் படுகாயம் அடைந்தார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை-பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை இந்த சாலையில் நடமாடியது. சமீபத்தில் அந்த வழியாக கேரட் ஏற்றிச் சென்ற லாரியை, யானை வழிமறித்தது. ஓட்டுநரும் உடனே வண்டியை நிறுத்தினார். பின்னர், லாரியில் இருந்த கேரட்டை யானை ருசித்துக் கொண்டிருந்தது.