புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சிபிஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். இதை நிறைவேற்றும் வகையில் அவர் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ளார்.
துணை குடியரசு தலைவராக ஜெக்தீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து அப்பதவிக்கானத் தேர்தலில் தன் புதிய வேட்பாளரை தேர்வு செய்ய பாஜக ஆலோசித்தது. இதற்கான பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.