பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள அவர‌து வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது மகன் கார்த்திகேஷ் அளித்த புகாரில், ''எனது தந்தையை எனது தாய் பல்லவி (64), எனது சகோதரி கீர்த்தி (31) ஆகியோர் கொலை செய்திருக்கலாம். சொத்து பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக இருவரும் அவரை கொல்ல சதி தீட்டினர்'' என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து எச்.எஸ்.ஆர்.லே அவுட் போலீஸார், ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி, மகள் கீர்த்தியை பிடித்து விசாரித்தனர். அப்போது பல்லவி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: