ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கண்மாய், குளங்கள், நீரோடை ஆகியவற்றில் நீர் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதனடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு உட்பட்ட தேர்வு செய்யப்பட்ட கண்மாய், குளங்களில் நீர்ப்பறவைகள் கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் ஏராளமான பறவைகள், வண்ணமயமான பறவைகளை கணக்கெடுத்து பார்வையிட்டு பதிவு செய்தனர்.
இது குறித்து இயற்கை ஆர்வலரும், பறவைகள் ஆராய்ச்சியாளருமான நடராஜன் (50) என்பவர் கூறுகையில், ‘விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு வகையான நீர்ப்பறவைகள் உள்ளன. இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்ச் பகுதியில் 40 வகையான நீர்ப்பறவைகள் உள்ளன. கடந்த காலங்களை விட தற்போது நீர்ப்பறவைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது’ எனவும் தெரிவித்தார்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 40 வகை ஈரநில பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல் appeared first on Dinakaran.