அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 242 பேரில் ஒருவர் மட்டும் பிழைத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 242 பேரில் இந்தியர்கள் 169 பேர், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 53 பேர், போர்ச்சுகல் நாட்டினர் 7 பேர், கனடாவைச் சேர்ந்தவர் ஒருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
The post அகமதாபாத் விமான விபத்து: 241 பேர் உயிரிழப்பு என ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.