பத்ம பூஷண் விருது வென்றுள்ள நடிகர் அஜித் குமாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று யோகிபாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
‘பேபி & பேபி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபுவும் கலந்துக் கொண்டார். இந்த விழா முடிந்து கிளம்பும்போது அஜித் குறித்து யோகிபாபுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.