ஐசிசி தொடர்களில் 2011-ல் ருந்தே தொடர்ந்து நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெற்று இந்திய அணி மிகச் சிறப்பாக ஆடி வரும் நிலையில், அடுத்த 8 ஆண்டுகளுக்கு உலகை எதிர்கொள்ள இந்திய அணி தயாராகவே உள்ளது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் நியூஸிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றதையடுத்து அடுத்தத் தலைமுறை வீரர்கள் அட்டகாசமாக அணியைக் கொண்டு செல்வார்கள் என்று விராட் கோலி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.