கோவில்பட்டி: அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பேருந்துகளில் பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் கோட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் கோட்டமும் உள்ளன. இந்த கோட்டங்களின் கீழ் பல்வேறு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. தினந்தோறும் மதுரை மண்டல போக்குவரத்துக் கழகம் மூலம் மதுரையில் இருந்து திருச் செந்தூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு இடையே மண்டேலா நகர், காரியாபட்டி, கல்குறிச்சி, பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, மேலக்கரந்தை முத்துலாபுரம், எட்டயபுரம், கீழஈரால், எப்போதும் வென்றான் குறுக்குச்சாலை, தூத்துக்குடி, ஸ்பிக்நகர், பழைய காயல், ஆத்தூர், முக்காணி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் என 20-க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள் உள்ளன.