Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: அளவுக்கு மிஞ்சினால்…!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
அறிவியல்ஆரோக்கியம்கட்டுரைமருத்துவம்

அளவுக்கு மிஞ்சினால்…!

EDITOR

poisones medicines

மனித இனம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாருமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோரையுமே ஓர் இனம்புரியாத அச்சம் பற்றிக் கொண்டிருக்கிறது. காரணம், வேறொன்றுமல்ல. நுண்ணுயிரிகள் (பாக்ட்டீரியாக்கள்) மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. நுண்ணுயிரிக் கொல்லி (ஆன்டிபயாட்டிக்) மருந்துகளுக்குப் பல நுண்ணுயிரிகள் (மைக்ரோப்ஸ்) எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை காணப்படுகிறது.

பாக்டீரியாக்கள் என்பது பரவலாக அறியப்படும் நுண்ணுயிரிகள். அவற்றைக் கட்டுப்படுத்தத் தரப்படும் மருந்துகள் காலப்போக்கில் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியைப் பெற்று விடுகின்றன. அளவுக்கதிகமாக பயன்படுத்தப்படுவதாலும், தவறாகப் பயன்படுத்தப்படுவதாலும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள், நோய்களுக்குக் காரணமான நுண்ணுயிரிகளை அழிக்கும் சக்தியை இழந்துவிடுகின்றன. கடந்த அரை நூற்றாண்டு கால ஆன்டிபயாட்டிக் உபயோகத்தின் காரணமாக, இப்போது அவை வீரியம் இழந்து, நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தியையும் இழந்து விட்டிருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பெண்மணிக்கு அதிகமான வீரியங்களையுடைய எல்லா நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளையும் (ஆன்டிபயாட்டிக்) கொடுத்துப் பார்த்தும், சாதாரண ஜலதோஷம் போன்ற நுரையீறல் தொற்றைக்கூட குணப்படுத்த முடியவில்லை. இது மருத்துவர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி இருக்கிறது.

மருந்துகளுக்கு, குறிப்பாக, நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஜீவ அணுவையுடைய நுண்ணுயிரி முதன்முதலில் சீனாவில்தான் காணப்பட்டது. அந்த ஜீவ அணுவை உடைய பாக்டீரியா குறித்து சீன மருத்துவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள். சர்வதேச அளவில் இது குறித்து விவாதிக்கப்

பட்டது. அப்போது அவர்கள் அதிர்ச்சியளிக்கும் இன்னொரு உண்மையை உணர்ந்தனர்.

நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளுக்கு கட்டுப்படாத ஜீவ அணுவையுடைய அந்த பாக்டீரியா, தனது நுண்ணுயிரிக் கொல்லிக்கான எதிர்ப்பு சக்தியை ஏனைய நுண்ணுயிரிகளுக்கும் பரவவிட முடியும் என்பதுதான் அவர்கள் எதிர்கொண்ட அதிர்ச்சி. அப்படிப் பரவவிடும்போது, மனிதர்களுக்கும் அது பரவி, எந்தவித நுண்ணுயிரிக் கொல்லி மருந்தாலும் (ஆன்டிபயாட்டிக்) நோய்களை குணப்

படுத்த முடியாத நிலைமை ஏற்படக்கூடும்.

சமீபத்திய ஆய்வின்படி, ஆண்டுதோறும் ஏறத்தாழ 7,00,000 பேர் மருந்துகளுக்குக் கட்டுப்படாத தொற்றுக்களால் மரணமடை

கிறார்கள். இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிகமாகக் கூடும் என்கிறது அந்த ஆய்வு. அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு, உலகளாவிய அளவில், சுமார் 100 ட்ரில்லியன் டாலராக இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.

நுண்ணுயிரிகள் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தியை ஒருவித பரிணாம முறையில் அடைந்து விடுகின்றன. தொடர்ந்து ஒரு மருந்து மீண்டும் மீண்டும் தரப்படும்போது, உடலில் உள்ள நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் அந்த மருந்துக்கான எதிர்ப்பு சக்தியைப் பெற்று விடுகின்றன. இந்த நிலைமையை அதிகப்படியான அல்லது தவறான நுண்ணுயிரிக் கொல்லி மருந்துப் பயன்பாடு விரைவுபடுத்துகிறது. தேவையில்லாத, அதிகமான ஆன்டிபயாட்டிக் பயன்பாடு மட்டுமல்ல, குறிப்பிட்ட கால அளவு முழுமையா

காமல் மருந்தை நிறுத்துவதும்கூட, நுண்ணுயிரிகளின் எதிர்ப்பு சக்தி வலு இழப்பதற்கான காரணியாகி விடுகிறது.

அதேபோல, கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்களுக்கு அவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், நோய் தொற்றிக் கொள்ளாமல் தடுக்கவும், தேவையே இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பண்ணைகளில் செலுத்தப்படுகின்றன. இதனால், நுண்ணுயிரிகள் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு சக்தியைப் பெற்று விடுகின்றன. மாமிச உணவை மனிதர்கள் உட்கொள்வதால், அந்த நுண்ணுயிரிகள் மனிதர்களிலும், ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடுகின்றன. சில நாடுகளில் பள்ளிகளில் ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து நாடுகளிலும் இந்தத் தடை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

நுண்ணுயிரிகளில் காணப்படும் இப்போதைய ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு சக்தி தொடருமானால், மிகவும் அச்சுறுத்தும் சூழலை மனித இனம் எதிர்கொள்ள வேண்டிவரலாம். அறுவை சிகிச்சைகளும், உறுப்பு மாற்றுதலும் மிகவும் ஆபத்தானவையாகிவிடும். சாதாரண ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்றவைகூட உயிரிழப்பில் முடியும் நிலைமை ஏற்பட்டுவிடும். கட்டுக்குள் வந்துவிட்டது என்று நாம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் பிளேக், காலரா, காச நோய், அம்மை போன்ற நோய்கள், அதிவீரியத்துடன் உயிர்பெற்றெழுந்து மனித இனத்தின் பேரழிவுக்குக் காரணமாகக்கூடும். ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முற்பட்ட நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்களும், மக்கள் நல்வாழ்வு ஆய்வாளர்களும் கருதுகிறார்கள்.

இப்போது இருப்பதைவிட வலிமையும், வீரியமும் கொண்ட நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளைக் கண்டுபிடித்தாக வேண்டும். அதனால் அதிக லாபமில்லை என்பதால் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகின்றன. அரசுதான் இதற்கான நிதியுதவி அளித்து ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தாக வேண்டும்.

மனித இனத்தை மிகப்பெரிய ஆபத்து எதிர்கொள்கிறது. கவனக்குறைவாக இல்லாமல் இதை நாம் சவாலாக எடுத்துக்கொண்டு விடை காணாமல் போனால், ஒட்டுமொத்த மனித இனமே அடுத்த நூறு ஆண்டுகளில் அழிந்து போகக்கூடும்!

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ராமநாதபுரம்: கடலாடி அரசு கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க வர்த்தக சங்கம் கோரிக்கை
  • மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பெயர் நீக்கம் – ஐகோர்ட்டில் வனிதா தகவல்
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் கூடுதல் அவகாசம் 
  • பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக சர்ச்சை!
  • 9 கி.மீ தார் சாலை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைவாழ் மக்கள் – தேன்கனிக்கோட்டை அருகே வேதனை
  • இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது போயிங்

You Might Also Like

போகி: ஒரு வழக்கமான தவிர்க்க முடியாத கோரிக்கை!

January 14, 2015
கட்டுரை

இறந்தவர்களை இழிவு செய்தல் தகுமோ..!

July 15, 2025
கட்டுரை

இஸ்ரேல் – ஈரான் போர்: சாமானிய இந்தியருக்குச் சுமை ஏற்றிவிடக் கூடாது!

June 24, 2025

பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்?

May 18, 2015

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?