திருவனந்தபுரம்: ஆடி மாத முதல் நாளான நேற்று சபரிமலையில் மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. ஆடி மாத முதல் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. கணபதிஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
நேற்று முதல் நெய்யபிஷேகமும் தொடங்கியது. ஆடி மாத முதல் நாளான நேற்று கனமழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்திருந்தனர். வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
The post ஆடி மாத பூஜை சபரிமலையில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.