டெல்லி: ஆபரேஷன் சிந்தூரை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்களை இந்தியா குண்டு வீசி அழித்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிகளிடம் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
The post ஆபரேஷன் சிந்தூரை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.