ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்ததில் இருந்தே இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் இருந்து வந்தது. ஒருவழியாக அந்த சம்பவம் நள்ளிரவில் நடந்து முடிந்திருக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்கள், பாகிஸ்தானில் உள்ள 4 இடங்கள் என 9 இடங்களை இந்திய பாதுகாப்பு படை குறிவைத்து ஏவுகணை மூலம் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது. இவை அனைத்தும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களாக செயல்பட்டவை என்று ராணுவம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.