டெல்லி: ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச .நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்துள்ளது. 10 பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் எனவும் அரசியல் சாசன பிரிவு 142-ன் படி உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச .நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் appeared first on Dinakaran.