டெல்லி: இது மிகவும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என தயாநிதிமாறன் எம்.பி. தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பட்ஜெட் அப்படித்தான் தெரிகிறது, டெல்லி வாக்காளர்களை, குறிப்பாக பிப்ரவரி 5ம் தேதி வரவிருக்கும் டெல்லி தேர்தலுக்காக, கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 12 லட்ச ரூபாய்க்கு வரி இல்லை என்று நிதியமைச்சர் பெரிய விலக்கு அளித்துள்ளார். பின்னர் அவர் 8-12 லட்ச ரூபாய்க்கு 10% வரி வரம்பு உள்ளது என்று கூறுகிறார். எனவே, இது மிகவும் குழப்பமாக இருக்கிறது. இந்த ஆண்டு பீகாரில் தேர்தல்கள் இருப்பதால் அது பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது.தமிழ்நாடு அல்லது வேறு எந்த தென் மாநிலங்களுக்கும் ஒரு வார்த்தை கூட இல்லை என அவர் தெரிவித்தார்.
The post இது மிகவும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்.. தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட இல்லை: தயாநிதிமாறன் எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.