இந்தியாவின் நிதி அமைப்பு நெகிழ்வுத் தன்மை கொண்டது என ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் நிதி அமைப்பு, விரைவான பொருளாதார வளர்ச்சியால் உந்தப்பட்டு மிகவும் நெகிழ்ச்சியுடனும், மாறுபட்டதாகவும் மாறியுள்ளது. இந்திய நிதி அமைப்பு 2010-களின் உலக பெருமந்த நிகழ்வுகளில் இருந்து மீண்டெழுந்து பிறகு 2020-ல் கோவிட் பேரிடரையும் வலிமையாக தாங்கிக் நின்றது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தை நிதியுதவி வளர்ச்சி கண்டுள்ளன. இதில், பொதுத் துறை நிதி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.