டெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜெய்சங்கர் விவரிக்க உள்ளார். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சற்று நேரத்தில் தூதர்களுக்கு விவரிக்க உள்ளார். இந்தியாவின் முடிவுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கோரிக்கை வைக்க உள்ளார். தீவிரவாதத்துக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.
The post இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் ஒன்றிய அரசு அழைப்பு..!! appeared first on Dinakaran.