வரும் காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியப் பகுதிகளில் கடும் மழைப்பொழிவும், கடும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில், காலநிலை மாற்றம் மற்றும் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் பேசியதாவது: கால நிலை மாற்றத்தின் தாக்கத்தால் குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பொழிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையில் 50 சதவீதம், குறுகிய காலத்தில், அதாவது 16 மணி நேரத்தில் பெய்துவிடுகிறது. இது 14 மணி நேரமாக குறைந்து விட்டது. வரும் காலங்களில் இன்னும் குறுகிய காலத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.