டெல்லி: விண்வெளித்துறையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையில் இந்தியா நிகழ்த்திய சாதனைகள் குறித்து சர்வதேச விண்வெளி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; விண்வெளித்துறை இந்தியாவின் பயணம் மற்ற நாடுகளுடன் போட்டி போடுவதற்கு அல்ல. சார்க் நாடுகளுக்காக இந்தியா செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் விண்கலம் தரையிறங்கியது மகத்தான சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
The post இந்தியா வரலாறு படைத்துள்ளது.. சார்க் நாடுகளுக்காக இந்தியா செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!! appeared first on Dinakaran.