கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இரண்டு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த டிச.24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது விடுவித்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர்.
The post இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை appeared first on Dinakaran.