‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்துள்ளார். நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளைப் பெற தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கி வரும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, குடிநீர் இணைப்பு, ஆதார் மாற்றம் என பொதுமக்களின் தேவைகள் ஏராளம். அவற்றை அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பலமுறை அலைந்தும் நடக்காத பல விஷயங்களை இந்த முகாம்கள் மூலம் பெறுவதற்கான வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது.