ரயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு கணிப்பொறி சார்ந்த தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
இது பற்றி ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது; ரயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு முடிந்த அளவிற்கு சொந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கான கணிப்பொறி சார்ந்த முதல் கட்ட தேர்வு பல கால முறைகளில் நடந்தது. ஒவ்வொரு கால முறைக்கும் வேறு, வேறு கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டன. தேர்வர்கள் வசதிக்கென இரண்டாம் கட்ட தேர்வு ஒரே கால முறையில் , ஒரே மாதிரியான பொதுவான கேள்வித்தாளுடன் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக தேர்வர்களுக்கு முடிந்த அளவிற்கு சொந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.