புதுச்சேரி: தமிழுக்கு எதிராக பேசுபவரை உலகத் தமிழ் மாநாட்டு குழுத்தலைவராக நியமிப்பதா என கேள்வி எழுப்பியுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவரை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என புதுச்சேரி அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும், உலகத் தமிழறிஞர்களை ஒன்றிணைக்கும் வகையில் 2 ஆண்டுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 1966 முதல் 2023 வரை 11 உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2023-ல் கோலாலம்பூரில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. புதுவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என 2023 பட்ஜெட்டில் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.