புதுடெல்லி: அரியானா மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்பவர், கடந்த 2023ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் (டேனிஷ்) என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் ஜோதி மல்ஹோத்ரா குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இவர் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அனார்கலி பஜாரில், ஆறு துப்பாக்கிய ஏந்திய நபர்களுடன் இருந்ததை ஸ்காட்லாந்து யூடியூபர் காலும் மில் என்பவர் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார். அவரது பதிவில், ‘ஜோதி மல்ஹோத்ராவை சுற்றிலும் ஏகே-47 துப்பாக்கிகளுடன் ஆறு பாதுகாவலர்கள் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இவர், பாகிஸ்தானின் விருந்தாளியாக உபசரிக்கப்படுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் பெற்ற விஐபி வரவேற்பு மற்றும் அவரது சந்தேகத்திற்குரிய தொடர்புகளை வெளிப்படுத்தியது.
The post உளவுபார்த்த வழக்கில் கைது துப்பாக்கி வீரர்கள் புடைசூழ பாக்.கில் பெண் யூடியூபர் உலா appeared first on Dinakaran.