நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த எடக்காடு பகுதியில் பாலத்தின் மீது சிறுத்தை ஏறிச் சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை அதிகாலை நேரத்தில் ஊட்டி அருகே உள்ள எடக்காடு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் நடமாடிய சிறுத்தை, சாலையோர பாலத்தில் ஏறி நடந்தபடி இரை தேடி நோட்டமிட்டது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் ரோட்டை கடந்து பாலத்தில் அமர்ந்திருந்த சிறுத்தையை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.