Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு

EDITOR

புதுடெல்லி: கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா (38) ஏமன் நாட்டில் அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து மருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த 2017ல் பிரியா போதை மருந்து கொடுத்து தலாலை கொலை செய்ததாகவும் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி நிலத்தடி தொட்டியில் மறைத்ததாகவும் கைது செய்யப்பட்டார். சனா சிறையில் அடைக்கப்பட்ட பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், பிரியாவை காப்பாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி ஆஜராகி தகவல் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘இந்திய குடிமக்களை காப்பாற்றவே அரசு விரும்புகிறது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டது. இனியும் அரசு எதுவும் செய்ய முடியாது. குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் சென்று நிலைமையை சிக்கலாக்க அரசு விரும்பவில்லை.

ஏனெனில் உலகின் மற்ற பகுதிகளை போன்றது அல்ல ஏமன். அங்கு என்ன நடக்கிறது என்பதை அரசு அறிந்து கொள்ள எந்த வழியும் இல்லை. தற்போதுள்ள ஒரே வழி பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள நர்ஸின் குடும்பத்தினர் நஷ்டஈடு கொடுப்பது மட்டுமே உள்ளது’’ என்றார். அதே சமயம், கேரள நர்ஸின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சோழவந்தான் அருகே தேவாலய சொத்தை தனிநபருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
  • ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ‘நேட்டோ’ பகிரங்க எச்சரிக்கை: அமெரிக்காவும் சேர்ந்து மிரட்டுவதால் சவால்
  • சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • திருக்குறளில் கலப்படம் செய்யும் ஆளுநர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
  • எம்.பி. பதவி: கமல்ஹாசனை வாழ்த்தி ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு
  • ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

You Might Also Like

உ.பி.யில் 5,000 அரசு பள்ளிகளை மூட எதிர்ப்பு.. பாஜக அரசின் கல்வி உரிமைச் சட்டம், தலித், ஏழை மாணவர்களுக்கு எதிரானது: பிரியங்கா காந்தி!!

July 15, 2025

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு!!

July 15, 2025

மனைவியின் டார்ச்சரில் இருந்து விடுதலை விவாகரத்து கிடைத்ததும் 40 லிட்டர் பாலில் குளியல்: அசாமில் கணவன் வைரல் சம்பவம்

July 15, 2025

பெங்களூருவில் ரவுடி கொடூர கொலை: பாஜக எம்எல்ஏ மீது கொலை வழக்கு

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?