சென்னை: ஒன்பிளஸ் Nord CE 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் உடன் ஒன்பிளஸ் Nord 5 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 அறிமுகமாகி உள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 5 போன் சீரிஸ் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நார்ட் 4 அறிமுகமாகி இருந்தது.