சென்னை: குடிநீர் கேன்களில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து தண்ணீரை நிரப்ப வேண்டும் என, குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கான உணர்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உணவு வணிகர்களிடம், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் பேசுகையில், “குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உள்ள குடிநீர் தொட்டிகள் பெரும்பாலும் பாசிபடிந்து தான் இருக்கின்றன.